முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாயார் ரேவதி ஆகியோர் 26-ந்தேதி அன்று குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.