எடப்பாடி பழனிசாமி 
செய்திகள்

151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் 151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மாலை மலர்

இந்தியா முழுவதும் நாளை வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை டிஜிபி அலுவலகம் நினைவு சின்னத்தில் வீரமரணம் அடைந்த காவலர்கள் 151 பேரின் உருவம் பொறித்த கல்வெட்டை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், மரக்கன்று நட்டினார்.

முதல்வருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.