செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கோபத்தில் உள்ளனர் - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram #PetrolPriceHike

மாலை மலர்

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் எரிபொருளைக் கொண்டு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும்.  எரிபொருள் விலையை லிட்டருக்கு 5 முதல் 7 ரூபாய் வரை குறைக்க முடியும்.