கைது 
செய்திகள்

செங்கம் அருகே விவசாயியை தாக்கியவர் கைது

செங்கம் அருகே விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம்:

செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானச்செல்வன் (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயசங்கர் (52) என்பவருக்கும் விவசாய நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெய்சங்கர் மற்றும் ஞானச்செல்வனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெய்சங்கர் ஞானச்செல்வனை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஞானச்செல்வன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT