செங்கம்:
செங்கம் பறக்கும்படை தாசில்தார் ரமேஷ் தலைமையிலான குழுவினர் செங்கம் அடுத்த பரமனந்தல் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டேங்க் கவரில் இருந்த பையில் ரூ.72 ஆயிரத்து 200 இருந்தது. இந்த பணத்திற்கு உண்டான ஆவணங்கள் எதுவும் பைக்கில் வந்தவரிடம் இல்லை.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LoksabhaElections2019