செங்கம்:
செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜிதா (வயது 56). இவரும், அவரது பேத்தி ரிஷ்வானாவும் (8) கடந்த 13-ந் தேதி வீட்டில் தூங்கிக் கெண்டிருந்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கி கொண்டிருந்த 2 பேரையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஷாஜிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரிஷ்வானா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறாள்.
இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.