செய்திகள்

தெலுங்கானா சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்- சந்திரசேகரராவ் முடிவு

தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. #ChandrasekharRao

மாலை மலர்

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.

ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.

அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.