நகரி:
கிருஷ்ணா நதி நீர் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது பிரகாசம் பேரேஜ் மேற்கு பகுதியில் நீர்மட்டம் 12 அடிகள் எட்டியுள்ளது. இந்தநிலையில் நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளில் நதிநீர் புகும் அபாயம் இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர். மொத்தம் 36 வீடுகளுக்கு இதுபோன்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதில் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசிக்கும் உண்டவள்ளி வீட்டுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.