மழை நிலவரம் 
செய்திகள்

வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வடமாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடமாவட்டங்களான காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் இதுவரையில் 81 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இயல்பான மழை அளவான 114 மி.மீட்டரை விட 23 மி.மீட்டர் குறைவாக மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 8 செ.மீட்டர், காவேரிபாக்கம் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.