நிர்மலாதேவி விவகாரம்- சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
நிர்மலாதேவி வழக்கு தொடர்பான புகாரை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாலை மலர்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.