செய்திகள்

அஸ்தானா வழக்கை விசாரித்த அதிகாரி இடமாற்றம் - உச்ச நீதிமன்றத்தை நாடினார்

சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #CBIVsCBI #CBIOfficerTransfer #RakeshAsthana

இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத் தொழிலதிபரை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான மணிஷ் குமார் சின்கா மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு திடீரென மாற்றப்பட்டார்.