காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூக அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இன்றும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாஸ்திரிபவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முக்கொம்பு ஆற்றில் இறங்கி விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.