உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கம்போடியா நாட்டில் நேற்று 478 கிலோ சட்டவிரோத போதைப்பொருள் தீ வைத்து எரிக்கப்பட்டது.