போரூர்:
அய்யப்பந்தாங்கல் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு மாநகர பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இன்று அதிகாலை 3 மணி அளவில் அய்யப்பந்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் (எண். 26 எம்) பஸ் தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
போலீஸ் விசாரணையில் பேட்டரி கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.