செய்திகள்

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம்: ரனில் விக்ரமசிங்கே

பெரும்பாலான சதிகாரர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவோம் என்றும் இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அறிக்கை வெளியிட்டுள்ளார். #srilankablasts #RanilWickremesinghe

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சிறிய அமைப்பாக இருந்தாலும், நன்கு பயிற்சி பெற்ற அமைப்புதான் இலங்கை குண்டுவெடிப்பை நடத்தி உள்ளது. அதனுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர். தற்போது, நாடு இயல்புநிலைக்கு திரும்ப தயாராகிவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனைவரும் உதவ வேண்டும்.

SCROLL FOR NEXT