செய்திகள்

மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்றது- மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சி

தர்மபுரியில் மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாலை மலர்

தருமபுரி:

தருமபுரி நெசவாளர் காலனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திடீரென்று அந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரித்த போது திருமணத்துக்கு முதல் நாள் மதியம் மணமகள் தனது காதலனுடன் சென்று விட்டதால் திருமணத்தை நிறுத்தி விட்டதாக தெரிவித்தனர்.

காதலனுடன் ஓடிய மணப்பெண் தருமபுரியில் உள்ள திருப்பத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர். மணமகன் தருமபுரி காந்தி நகரை சேர்ந்தவர். நேற்று முன்தினமே மணமகள் காதலனுடன் ஓடியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார் உறவினர்களுக்கும், சமையல் கலைஞர்கள் உள்ளிட்ட மண்டப வேலையாட்களிடம் தகவலை தெரிவித்து திருமண நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டனர்.