செய்திகள்

பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு: வனவிலங்கு சரணாலயம் மூழ்கியது

பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அசாம் மாநிலத்தின் முக்கிய சரணாலயமான போபிடோரா வனவிலங்குகள் சரணாலயதிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. பிரதான நதியான பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அபாய அளவைத் தாண்டி ஓடும் ஆற்று வெள்ளமானது, தாழ்வான பகுதிகளை மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் பிரம்மபுத்திரா ஆற்று வெள்ளம் போபிடோரா வனவிலங்குகள் சரணாலயத்தை மூழ்கடித்துள்ளதாக வனத்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.