செய்திகள்

நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்

நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டியில் விதிமுறைகளை மீறியதற்காக பவுல்ட்டுக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Boult #Mahmudullah

நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர்.

இதை தொடர்ந்து இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Boult #Mahmudullah

SCROLL FOR NEXT