வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர்களுக்கு குரவப்புலம் பகுதியில் எரிசாரயம் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்ததில் அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராசகுமார் (வயது 40) என்பவர் 120 லிட்டர் எரிசாரயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து ராசகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.