ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் இன்று காலை துணை ராணுவ வீரர்கள் (சிஆர்பிஎப்) சுமார் 10 பேருந்துகளில் தங்கள் முகாம் நோக்கி சென்றுகொணடிருந்தனர். காலை 10.30 மணியளவில் பனிஹல் நகரில் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. இதனால் பாதுகாப்பு வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. அதில் ஒரே ஒரு பேருந்தின் பின்பகுதி மட்டும் லேசாக சேதம் அடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.