புதுவையில் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வெளியான மறுநாளே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மேலும் பா.ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த கட்டண உயர்வை கடுமையாக கண்டித்து உள்ளன. பொதுமக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் அம்மிக்கல்லை வைத்து மசாலா அரைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.