லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் நூர்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் லோகேந்திர சிங். இன்று காலை தனது காரில் அவர் சென்று கொண்டிருந்த போது, சிதாபூர் அருகே சாலையின் எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லோகேந்திர சிங் அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு போலீசார் மற்றும் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews