பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன்சிங்பெடி பாய்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த சூழ்நிலையை (கும்ப்ளே விலகல்) தவிர்க்கக் கூடிய ஒன்று. இது மைதானத்தில் யார் தலைவர்? மைதானத்துக்கு வெளியே யார் தலைவர் என்பதில்லை. இருவரும் நாட்டுக்காக தங்களது திறமை அடிப்படையில் சேவை செய்ய வந்துள்ளனர். நம்மிடம் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். ஆனால் ஒரே பாதையில் தான் செல்ல வேண்டும். இருவரிடம் யார் முதலிடம் என்ற நிலையை உருவாக்கியது கிரிக்கெட் வாரியம் தான் என்றார்.