இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். விராட் கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்களும், 2-வது இன்னிங்சில் 51 ரன்களும் சேர்த்தார்கள்.
விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடுவதால், இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் விராட் கோலியை நெருக்கடிக்கு உள்ளாக்குவோம் என்று இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.