சென்னை பள்ளிக்கரணையில் கடந்த மாதம் 2-ம் தேதி சாலையின் நடுவில் உள்ள பேனர் விழுந்ததால் விபத்து ஏற்பட்டு இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.