அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இலங்கை கேப்டன் சண்டிமல் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் சண்டிமலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் பந்தை சேதப்படுத்தும் வீரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான விதிமுறையை தெளிவாக வகுக்க வேண்டும் என்றும் முன்னணி வீரர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்நிலையில் ஐசிசியின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.