சென்னை உயர்நீதிமன்றம் 
செய்திகள்

பாகூர் எம்எல்ஏ தகுதி நீக்கம்: புதுச்சேரி சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

புதுச்சேரி பாகூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாலை மலர்

புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ..-வாக இருந்தவர் தனவேலு. இவர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த 10-ந்தேதி சபாநாயகர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றமத்தில் வழக்கு தனவேலு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பாகூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டசபை சபாநாயகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் 4 வாரத்திற்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.