அதன்பின் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன், பிரிஸ்பேன், சிட்னியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
அடிலெய்டில் நடைபெற்ற 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று பெர்த்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 எனத் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை படுதோல்வியடையச் செய்தது.
படுதோல்வியை சந்தித்தாலும் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென்.