செய்திகள்

ஆசிய மல்யுத்த போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலம்

டெல்லியில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த கிரீகோ ரோமன் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பந்தயத்தில் இந்திய வீரர் அனில் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

மாலை மலர்

புதுடெல்லி :

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் கிரீகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத்சிங் (80 கிலோ) வெண்கலப்பதக்கம் வென்றார்.

2-வது நாளான நேற்று நடந்த கிரீகோ ரோமன் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பந்தயத்தில் இந்திய வீரர் அனில் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.