புதுடெல்லி :
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் கிரீகோ ரோமன் பிரிவில் இந்திய வீரர் ஹர்பிரீத்சிங் (80 கிலோ) வெண்கலப்பதக்கம் வென்றார்.
2-வது நாளான நேற்று நடந்த கிரீகோ ரோமன் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பந்தயத்தில் இந்திய வீரர் அனில் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இதேபோல் பெண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.