இந்திய அணி 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. ஆனால் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது போட்டி ‘டை’யில் முடிந்தது.
சதம் அடித்த ஷேசாத் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். சதம் அடித்தும் போட்டியில் முடிவு கிடைக்காதது ஷேசாத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முகமது ஷேசாத் கூறுகையில் ‘‘இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. கடுமையான வெப்பம், 6 மணி நேரம் கஷ்டப்பட்டு மைதானத்தில் விளையாடியுள்ளோம். இந்த முடிவு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.