செய்திகள்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பி ஷாபாஸ் ஷரீப் கைது

ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்ட ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் தம்பியும், பாக். முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷரீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். #ShehbazSharif

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரீப், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்டத்தில் விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் அளித்ததாக புகார் இருந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பியான இவர் இன்று திடீரென தேசிய பொறுப்புடைமை துறை அதிகாரிகளால் லாகூரில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே, நவாஸ் ஷரீப் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பின்னர் பதவியை இழந்து சமீபத்தில் அவரது தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஆதாரத்தின் அடிப்படையில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலையிடாது என இம்ரான் கான் அரசில் செய்தி தொடர்பு துறை மந்திரியாக உள்ள பாவத் சவுத்திரி தெரிவித்துள்ளார்.