செய்திகள்

தமிழ்நாட்டுக்கு ரூ.632 கோடி ஜி.எஸ்.டி. நிதி: அருண்ஜெட்லி தகவல்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுகட்டும் வகையில் தமிழகத்துக்கு ரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடுகட்டும் வகையில் தமிழகத்துக்கு ரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை கால கட்டத்துக்கு ரூ.24,500 கோடிக்கு தமிழகத்துக்கு வருவாய் இழப்பீடு என்று கணக்கிட்டதன் பேரில் மாத தவணைவாக கரூ.632 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.