செய்திகள்

காவேரிபட்டணம் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது

காவேரிபட்டணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.

மாலை மலர்

காவேரிபட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சந்தாபுரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி வந்த பழைய தருமபுரி குண்டலபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த லாரி உரிமையாளர் சுமதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.