திசையன்விளையில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1967-ல் தி.மு.க., காமராஜரை தோற்கடித்தது. அதன்பிறகு தேசிய கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தனர். இன்று வரை அதே நிலை தொடர்கிறது. தி.மு.க.,அ.தி.மு.க. என்று மாறி மாறி ஆட்சி நடத்துகிற ஊழல் ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காமராஜர் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஆன்மீக அரசியல் தான் காமராஜர் ஆட்சி. காமராஜரை தோற்கடித்த இந்த தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என அமித்ஷா கூறியுள்ளார். ஊழல் இல்லாத கட்சி என்றால் ரஜினியின் ஆன்மீக அரசியல் கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.