செய்திகள்

அரக்கோணம் அருகே மது குடித்த பெயிண்டர் மரணம்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மது குடித்த பெயிண்டர் வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

அரக்கோணம்:

அரக்கோணம் அருகே உள்ள பருத்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55), பெயிண்டர். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

ஜெயகுமாருக்கு மது பழக்கம் இருந்து வந்தது. தினமும் வீட்டிற்கு மது குடித்து விட்டு வந்துள்ளார். நேற்றும் மது போதையில் வீட்டிற்கு வந்து வாசலிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இன்று அதிகாலை விஜயகுமாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது, வலி தாங்கமுடியாமல் அலறினார். அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.