கோப்புபடம் 
செய்திகள்

சமயபுரம் போலீஸ் நிலையம் முன் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சமயபுரம் அருகே போலீஸ் நிலையம் முன் நடந்த கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த விக்னேஷ் (வயது 23) கடந்த சில மாதங்களுக்கு முன் முன்விரோதம் காரணமாக சமயபுரம் போலீஸ் நிலையம் முன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தங்கமணி(30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய சமயபுரம் மேலரதவீதியை சேர்ந்த சதீஸ்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.