ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியாவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு (வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ) பின்னடைவு ஏற்பட்டது. அல்பேனிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை உருவானபோது, ஆளும் கட்சி அதை தவிர்த்தது. இதையடுத்து சமூக ஜனநாயக கட்சி தலைவர் ஷோரன், அல்பேனிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.எம்.ஆர்.ஓ-.டி.பி.எம்.என்.இ. கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.