செய்திகள்

கோதாவரி ஆற்றில் படகு தீப்பிடித்தது- 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #BoatFire #PapiHills

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பாபிகொண்டலு மலைப்பகுதியின் அழகை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இன்று படகில் சென்றுகொண்டிருந்தனர். ராயல் கோதாவரி சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த படகில் 120 பேர் வரை சென்றதாக தெரிகிறது.

வீரவரப்பு ரங்கா கிராமத்தின் அருகே கோதாவரி ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென படகின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால் கடும் புகை எழுந்தது. பயணிகள் பீதியடைந்து படகின் ஒரு பகுதிக்கு ஓடினர். இதனால் படகு நிலை குலைந்தது. எனினும் படகோட்டி சாமர்த்தியமாக செயல்பட்டு கரைக்கு படகை திருப்பினார்.