வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். பா.ம.க.வும் மரண தண்டனையை ஒருபோதும் ஆதரிக்காது.
அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை வழங்கலாம் என்பது என் கருத்து. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami