செய்திகள்

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

மாலை மலர்

போர்ட்பிளேர்:

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.