பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கர்நாடக மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தவனேகரே பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் கூடாநட்பாக கூட்டணி அமைத்து மாநிலத்தின் ஆட்சியை அபகரித்துக் கொண்டனர்’ என தெரிவித்தார்.