சென்னை:
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“ஹெரிடேஜ்” பால் நிறுவனம் கடந்த 13-ந்தேதி செரிவூட்டப்பட்ட பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.
“ஜெர்சி பால்” நிறுவனமும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது.
இதற்கு பால் விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.