ராணுவம் தாக்குதல் 
செய்திகள்

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது பால்க் மாவட்டம். இந்த மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்குள்ள சாம்டால் மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.