சென்னை:
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கூறியதாவது:-
பழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் ஏற்கனவே தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.