செய்திகள்

1500 தொழிலாளர்கள் உழைப்பில் புதிய ரெயில் நிலையத்தை ஒரே இரவில் அமைத்த சீனா

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள முக்கிய ரெயில் தடத்தில் 1500 தொழிலாளர்களை கொண்டு ஒரே இரவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தெளிவான திட்டம், அசாத்திய வேகம் ஆகியவற்றால் சீனா எந்த சவால்களையும் முறியடித்து விடுகிறது. அவர்களின் உழைப்புக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ திட்டங்களை கூறினாலும், சமீபத்தில் ஒரே இரவில் ஒரு ரெயில் நிலையத்தையே முழுவதுமாக கட்டமைத்துள்ளது.

ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாக ரெயில் நிலையம் அமைக்க தேவைப்பட்டதால், கடந்த 19-ம் தேதி இரவில் பணிகள் தொடங்கப்பட்டு மறுநாள் காலை முடிக்கப்பட்டுள்ளன. 9 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டன.