உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. எனினும் இந்த எந்திரங்களில் மோசடிக்கே வாய்ப்பு இல்லை என தேர்தல் கமிஷன் சாதித்து வருகிறது.