கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ரெயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டது. இருப்பினும் அண்டை மாநிலங்களில் பிழைப்புக்காக தஞ்சம் அடைந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஷராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் பலர் பயணம் செய்து சொந்த மாநிலத்தை வந்தடைந்தனர்.