ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டம், தமானி என்ற இடத்தில் நேற்றிரவு இரு போலிசார் தங்களுடன் பணியாற்றும் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 9 போலீசார் பரிதாபம்மாக உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் தொடர்பான முதல்கட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை.