ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்தகான் பகுதியில் உள்ள சிதகோட்டா வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்கள் தப்பியோட முயன்றனர். இதையடுத்து அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.
இந்த என்கவுண்டரில் 7 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.