செய்திகள்

மூடுபனியால் வாகனங்கள் மோதல் - 6 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சாலையில் மூடுபனி கண்ணை மறைக்கும் அளவுக்கு படர்ந்திருந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #UPAccident #DenseFog

மாலை மலர்

வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.